செய்தியாளர் மீது தாக்குதல்: திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தியாளர் மீது  தாக்குதல்: திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள்

பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி நிருபர் மீது நேற்று இரவு நடந்த கொலை வெறி தாக்குதலை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு மீது நேற்று புதன்கிழமை இரவு மர்மநபர்கள் சரமாரியாக கொலைவெறிதாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் செய்தியாளர் நேசபிரபு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை வன்மையாக கண்டித்தும், இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்,

முன்னரே தகவல் அறிந்தும் உரிய நடவடிக்கை எடுத்து சம்பத்தை தடுக்காத காவல்துறையை கண்டித்தும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சங்க உறுப்பினர்கள் கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story