பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செய்தியாளர்கள்

பெரம்பலூர் மாவட்ட செய்தியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் பணிபுரியும் நியூஸ் 7 தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு,

மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழக அரசு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி செய்தியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தியும் கருப்பு பட்டை அணிந்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகை மற்றும் ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story