தென்காசியில் செய்தியாளர்கள் போராட்டம்

தென்காசியில் செய்தியாளர்கள் போராட்டம்

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தகவல்களை சரிவர தெரிவிக்காததால், செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தகவல்களை சரிவர தெரிவிக்காததால், செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தபால் வாக்குகள் எண்ணிக்கை ஸ்ட்ராங் ரூம் திறப்பு உள்ளிட்ட எந்த தகவல்களையும் செய்தியாளர்கள் சேகரிக்க முடியாத நிலை உள்ளது. மொத்தமுள்ள பத்திரிகையாளர்களில் ஏழு பேரை மட்டுமே முதல் கட்டமாக அழைத்துச் சென்றனர். அவர்களையும் பிஆர்ஓ அல்லது ஏபிஆர்ஓ உடன் வந்தால் தான் அனுமதிப்போம் என தடுத்து நிறுத்தியதால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story