உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலக முன்பாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து செய்தி வெளியிட்டதன் தாக்கமாக சமூக விரோதிகளும் குண்டர்களும் ஒன்று சேர்ந்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் TUJ சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினை மாநில தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் அறிவித்து இன்று நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் TUJ சங்கத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக செய்தியாளர்கள் அனைவரும் கருப்பு பேட்ச் அணிந்து சுதந்திரமாக செய்தியாளர்களை செயல்பட விடாத சமூக விரோதிகளை கண்டித்து தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story