அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்

அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்

அதிகாரிகளுக்கு உத்தரவு 

வாகுடியில் நூலகம் அமைக்க பரிசீலனை செய்து விசாரிக்க நீதிபதிகள் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முத்தனேந்தலில் அரசு பொது நுாலகம் இருந்தது. மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைக்காக முத்தனேந்தல் ஊராட்சி அலுவலகம் இருந்த இடத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) 2017 ல் கையகப்படுத்தியது. ஊராட்சி அலுவலகம் நுாலக கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

நூலகம் மூடப்பட்டது. இதுவரை நுாலகத்தை திறக்க நடவடிக்கை இல்லை. போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுாலகத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பினேன். வாகுடியில் அரசு நிலம் உள்ளது. அங்கு நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags

Next Story