சிறப்பு கிராம சபைக் கூட்டம்!

சிறப்பு கிராம சபைக் கூட்டம்!

கிராம சபா கூட்டம்

புதுக்கோட்டையில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஜூன் 28ஆம் தேதி நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி சிறப்பு கிராம சபைக் கூட்டம் 28.06.2024-ம் தேதியன்று காலை 11.00 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது.இந்த கூட்டத்தில் "கலைஞரின் கனவு இல்லம்" திட்டம், ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்ட பயனாளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தல். 15வது நிதிக்குழு மானியம் 2024-2025 க்கான தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல். மேலும் அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தகவல் வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story