ஏறையூர் ஜோசப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்கம்

ஏறையூர் ஜோசப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்கம்

ஜூனியர் ரெட் கிராஸ்

உளுந்துார்பேட்டையை அடுத்த எறையூர் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் துவக்க விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜோசப்ராஜ் தலைமை தாங்கினார். ஜே.ஆர்.சி. பொறுப்பாசிரியர் செந்தில் வரவேற்றார். மாவட்ட ஜே.ஆர்.சி., கன்வீனர் மாயக்கண்ணன் கொடியேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இணை கன்வீனர் துரை, ஜே.ஆர்.சி.பயிற்றுநர் ஆறுமுகம், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.

Tags

Next Story