மாணவர்களுக்கான சிறார் வாசிப்பு மன்றம் தொடக்க விழா!

மாணவர்களுக்கான சிறார் வாசிப்பு மன்றம் தொடக்க விழா!

சி.ம.புதூர் கிளை நூலகம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறார் வாசிப்பு மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.


சி.ம.புதூர் கிளை நூலகம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறார் வாசிப்பு மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் கிளை நூலகம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான சிறார் வாசிப்பு மன்றம் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா. கதிரொளி சிறார் வாசிப்பு மன்றத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். வாசிப்பின் அவசியம் குறித்து ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் கருத்துரைகளை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story