ஜோதிமணியம்மாள் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜோதிமணியம்மாள்  பிறந்தநாள் கொண்டாட்டம்

விழிப்புணர்வு பேரணி 

நாகப்பட்டினம் இ ஜி எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணியம்மாளின் பிறந்த நாளை முன்னிட்டு போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

நாகப்பட்டினம் இ ஜி எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணியம்மாள் பிறந்தநாள் விழாவானது கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு இ ஜி எஸ் பிள்ளை கல்வி குழுமத்தின் நிறுவனர் இ ஜி எஸ் பிள்ளையின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கல்வி வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டு மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் நலம் பெற சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கல்வி குழுமத்தின் தலைவர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு போதைப் பொருட்கள் தீமை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது .இந்நிகழ்வில் கல்வி குழுமத்தின் 2000 நிற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள் போதைப்பொருள் தீமை குறித்த முழக்கத்துடன் கலந்து கொண்டனர் இப்பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கியதோடு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்நிகழ்வில் கல்வி குழுமத்தின் செயலாளர், இணைச்செயலாளர், ஆலோசகர், நிர்வாகத்தினர், கல்வி குழுமத்தின் இயக்குனர்கள், ‌அனைத்து கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்கள் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

Tags

Next Story