காணும் பொங்கல்; அங்காளம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்

சங்ககிரி அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோயிலில் காணும் பொங்கலை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கல்வடங்கம் காவிரி ஆற்றின் கரையில் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் தை திருநாள் காணும் பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலை முதலே பால்,தயிர், சந்தனம்,திருமஞ்சனம், குங்குமம், திருநீர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் தங்கக்கவசம் சாத்துப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அருள்மிகு அங்காளம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story