சிவகாசியில் கபடி போட்டி: பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர்

சிவகாசியில் கபடி போட்டி: பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர்
பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர் 
சிவகாசியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பரிசு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சிவகாசி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில், மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்த வீரர்களுக்கு, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

போட்டி ஏற்பாடுகளை, அம்மா பேரவை துணைச்செயலாளர் வி.ஜி.கணேசன், மேற்கு மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணி, எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பிலிப்வாசு, மகளிர் அணி செயலாளர் சுபாஷினி, ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன் கருப்பு என்ற லட்சுமிநாராயணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், மாணவரணி இணை செயலாளர் முத்துராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story