கடையநல்லூர்: தக்காளி ரூ.50க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

கடையநல்லூர்: தக்காளி  ரூ.50க்கு விற்பனை  - விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விற்பனை 

கடையநல்லூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கோடை மழை காரணமாக விவசாயப் பயிர்கள் பெரும் சேதம் அடைந்தது. இதே போன்று காய்கறிச் செடிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதனால் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காய்கறி மார்க்கெட்டிற்கு தக்காளி பழம் வரத்து வெகுவாக குறைந்ததால் இன்று 31ம்தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.50 க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தக்காளி பழம் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story