முளைபாரி ஏந்திசென்று காலபைரவர் வழிபாடு

முளைபாரி ஏந்திசென்று காலபைரவர் வழிபாடு

முளைப்பாரி ஏந்தி சென்று கால பைரவர் வழிபாடு

அரியலூர் மாவட்டம் ,செங்குந்தபுரத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ,செங்குந்தபுரம் கிராமத்திலுள்ள ஶ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு காலபைரவர் கோவில் அமைக்கபட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தை மாத தேய்பிறை அஷ்டமியன்று முளைப்பாரி பூஜை விழா நடத்தபட்டு வருகிறது. இதனையொட்டி இந்த ஆண்டும் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர்.

மேலும் திருக்கோவில் முன்பு கும்மியடித்து வழிப்பட்டனர்.இதனையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதணை நடைப்பெற்றது. இதில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வணங்கினர்.

Tags

Next Story