கலைஞர் 101 : குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் ஏற்பாட்டில், இன்று கலைஞரின் 101 - வது பிறந்த நாளை முன்னிட்டு,மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம் எல் ஏ கலந்துகொண்டு இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து புத்தாடை பெட்டகம் வழங்கினார். நிகழ்ச்சியில் மதுராந்தகம் நகர செயலாளர் குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி, திமுக நிர்வாகிகள் தனசேகர், பேட்டை ஆறுமுகம் உள்ளிட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

Tags

Next Story