போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் கலைஞரின் பிறந்தநாள் விழா

போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.

போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் கலைஞரின் 101-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களது பிறந்த நாளை தமிழகத்தில் உள்ள அவரது கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் போச்சம்பள்ளி ஒன்றியம் திமுக சார்பில் கலைஞர் அவர்களது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான சாந்தமூர்த்தி தலைமை வகித்தார், ஒன்றிய குழு துணை தலைவர் மணிமேகலை அருள் ஒன்றிய கவுன்சிலர் அம்மன் ராஜா, பர்கூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு தணிகைவேலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் சாந்தமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாபா சங்கர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் இளையராஜா, சர்வேயர் கோவிந்தராஜ், வினோத்குமார், புளியம்பட்டி சத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இதில் கலைஞர் அவர்களது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் இதில் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story