நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் கலைஞர் பிறந்தநாள் விழா

அக்கமனஅள்ளி ஊராட்சி பாரதி நகர் பகுதியில் கலைஞர் பிறந்தநாள் விழாவை திமுக கொடியேற்றி வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி அ‌க்கமனஅள்ளி ஊராட்சி, பாரதிநகர் பகுதியில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் என்.ஏ.மாது தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் Dr.DNV.S. செந்தில்குமார் MDRD கலந்து கொண்டு திமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.ஆர்.சேட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், குட்டி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சோலை பூ.முனியப்பன், எஸ்.எம்.தங்கமணி, வி.ஆர்.இராமசாமி, எம்.பழனிசாமி, எம்.கே.சரவணன், எஸ்.கோவிந்தசாமி, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.செல்லதுரை,ஒன்றிய கழக நிர்வாகிகள் ஆர்.சண்முகம், சி.ராஜவேல், எம்.கே.மாது, பி.மகாலிங்கம், எஸ்.கோவிந்தராஜ், சி.சீரங்கமுத்து, அ.பெரியசாமி,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எம்.மேகராஜ், ஊராட்சி கழக நிர்வாகிகள் சேகரன், மாதேஷ், கிருஷ்ணன், முருகன், முனியப்பன், பொன்.பெரியசாமி, செந்தில், ராமநாதன், ராமலிங்கம், மாதேஸ், சின்ராஜ், ராமுகுட்டி, முனுசாமி, தேவராஜ்,கிளை செயலாளர் என்.பி.முருகன் LPF உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் ஊர்ப் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story