கலைஞர் நூற்றாண்டு விழா - மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய எம்.எல்.ஏ

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பரிசு வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி,கட்டுரை போட்டி ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கொ.ம.தே.க நிறுவன தலைவரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல்ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் இரமணி காந்தன்,திமுக ஒன்றிய செயலாளர் தங்கவேல்,ஒன்றிய குழு துணை தலைவர் ராஜபாண்டி ராஜவேலு,முதல்வர் வெங்கடாஜலம்,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன்,பிரபாகரன்,அருனாசங்கர்,அர்சுனன் உள்ளிடவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story