கலசபாக்கம் ஒன்றிய குழு கூட்டம்

கலசபாக்கம் ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றிய குழு கூட்டம் 

கலசபாக்கம் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் அன்பரசி ராஜசேகரன், தலைமையில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் அதன் தலைவர் அன்பரசி ராஜசேகரன், தலைமையில் நடைபெற்றது.

அப்பொழுது அவர் பேசுகையில் இப்பொழுது வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்து வருகிறது ,அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல் மழை அதிக அளவு பெய்து வருவதால் ஆற்றில் காற்றாற்று வெள்ளம் அதிக அளவு கரைபுரண்டு ஓடுகிறது ,அதனால் வெள்ளம் ஊருக்குள் வராத அளவிற்கு மணல் மூட்டை அடக்கி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.மேலும் குழந்தைகள் யாரும் ஆற்றங்கரை ஓரம் மற்றும் ஏரி ,குளம் ,குட்டை பகுதியில் குழந்தைகள் ,பெரியவர்கள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் அதற்காக நாம் அனைவரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் கலசபாக்கத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது .பணிகள் அனைத்தும் சரியாக அமைத்துக் கொடுக்க வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தமிழக அரசின் மூலம் தொடக்கப் பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அதில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு தட்டு ,டம்ளர் போன்றவை சரியாக வழங்க வேண்டும்.இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வழங்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, வட்டார -வளர்ச்சி அலுவலர் முருகன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story