கள்ளக்குறிச்சி : ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி : ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிச.9-ம் தேதி கள்ளக்குறிச்சியிலும், 29-ம் தேதி தலைமை செயலகம் முன்பும் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், அனந்தகிருஷ்ணன், மகாலிங்கம் தலைமை தாங்கினர். அண்ணாதுரை வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், லட்சுமிபதி, ரஹீம் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சங்க பொருப்பாளர்கள் அனந்தகிருஷ்ணன், மனோகரன்,குணசேகரன், செல்வராஜ், சாமிதுரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story