கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., பள்ளியில் விளையாட்டு போட்டி

கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., பள்ளியில் விளையாட்டு போட்டி

கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு, பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.


கள்ளக்குறிச்சி ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிக்கு, பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் உள்ள ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த இரண்டாமாண்டு விளையாட்டு போட்டிக்கு, பள்ளியின் நிறுவனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தாளாளர் ஜனனிசெந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ் பங்கேற்று விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், டேபிடல்ஸ், ஐரிஸ், துளிப் மற்றும் ஆர்கிட் ஆகிய 4 அணிகளை சேர்ந்த மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து, தடகள ஓட்டம், குண்டு மற்றும் தட்டு எறிதல் உட்பட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இறுதியில், ஆர்கிட் அணி முதலிடத்தையும், ஐரிஸ் அணி இரண்டாமிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பாக்கியராஜ், கஸ்துாரி, பவானி, சத்யா போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனர். துணை முதல்வர் பாபு நன்றி கூறினார்.

Tags

Next Story