கள்ளக்குறிச்சி பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சி பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்

மனுக்களை பெற்ற ஆட்சியர் 

கள்ளக்குறிச்சி பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பட்டா குறைகள், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனைப்பட்டா கோருதல், முதியோர் உதவித்தொகை, வேளாண்மை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை என பல்வேறு துறை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 419 கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் பெறப்பட்டன.

பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மாற்றுத் திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு,3 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story