கள்ளக்குறிச்சி : பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகை

கள்ளக்குறிச்சி : பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு  தொழுகை

சிறப்பு தொழுகை 

கள்ளக்குறிச்சி வட்டார பள்ளிவாசல்களில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ரம்ஜான் பண்டிகையொட்டி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள ஈத்தா மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முன்னதாக நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள ஜிம்மா பள்ளி வாசலில் இருந்து கடை வீதி வழியாக முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனர். தொடர்ந்து அனைத்து பள்ளி ஜாமாத்தார்கள் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடந்தது.

நடுத்தக்கா, அண்ணா நகர், காட்டுபுரித்தக்கா, கோட்டைமேடு, ஏ.கே.டி.,நகர், வ.உ.சி., நகர், கரியப்பா நகர் ஆகிய பள்ளி வாசல்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக பங்கேற்றனர். ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

Tags

Next Story