கள்ளக்குறிச்சி சம்பவம்; தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு விசாரணை

கள்ளக்குறிச்சி சம்பவம்; தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு விசாரணை

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு நேரில் சென்று, விசாரணை செய்தார். 

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு நேரில் சென்று, விசாரணை செய்தார்.
போலீஸ் அலட்சியத்தால் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் வீடுகளுக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு நேற்று நேரில் சென்று, விசாரித்தார். முன்னதாக, கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் சென்று, ''கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் அலட்சியமாக இருந்ததால்தான் இந்த மரண சம்பவங்கள் நடந்துள்ளது. சாராய விற்பனை உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்'' என, கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, கள்ளச்சாராயம் எப்படி உங்களுக்கு கிடைத்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.

Tags

Next Story