கல்லப்பாடி கெங்கையம்மன் சிரசு திருவிழா

கல்லப்பாடி கெங்கையம்மன் சிரசு திருவிழா

சிரசு திருவிழா 

வேலூர் மாவட்டம்,கல்லப்பாடி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது‌

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தில் உள்ள பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகாசிமாதம் 12ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும்.

அந்த வகையில் கெங்கைஅம்மன் சிரசு கல்லப்பாடி அருள்மிகு காளியம்மன் கோவிலிருந்து மேளதாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தது.

இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திகடனை நிறைவேற்ற பூ, காசுகள் எலுமிச்சைப்பழம் ஆகியவற்றை சிரசு மீது வீசி வழி நெடுங்கிலும் சூர தேங்காய்களை உடைத்தும் சண்டி மேளம் முழங்க சிலம்பாட்டதுடன் ஆலயம் கொண்டு வரப்பட்டு அம்மன் உடல் மீது சிரசு பொருத்தப்பட்டது.

கெங்கை அம்மன் சிரசு திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

Tags

Next Story