காமாட்சிபுர ஆதினம் மறைவிற்கு இந்து முன்னணி மாநில தலைவர் நேரில் அஞ்சலி!

ஆதீனம் மறைவு இந்து அமைப்புகளுக்கு மிகப் பெரிய இழப்பு-காடேஸ்வரா சுப்ரமணியம்.

கோவை: ஒண்டிபுதூர் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி சக்தி பீட ஆதினமாக இருந்து வந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தரார். இதனையடுத்து அவரது உடல் ஆதீன பிரதான மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எண்ணற்ற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்ரமணியம், காமாட்சி புர சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவு அனைத்து இந்துக்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார். ஆன்மீகத்தை கடந்து இந்துக்களுக்காக பல்வேறு போரட்டங்களை நடத்தி சுவாமிகள் உள்ளார் என கூறினார்.ஹிந்து நிறுவன அமைப்பாளர் ராமகோபாலனுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தார் எனவும் நிறுவன அமைப்பாளர் மரணமடைந்த போது உடன் இருந்து அனைத்து காரியங்களையும் செய்து கொடுத்த சிவலிங்கேஸ்வரர் இந்து முன்னணிக்கு பக்கபலமாக இருந்தவர் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்து அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஊர்வலத்தில் தைரியமாக கலந்து கொண்டார் எனத் தெரிவித்த அவர் சுவாமிகளின் மறைவு வருத்தம் அளிப்பதாகவும் இந்த மடம் அவர் செய்து வந்த பணிகளை தொடர்ந்து செய்திட வேண்டும் எனவும் அதற்கு இந்து முன்னணி துணையாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags

Next Story