பழுதடைந்த மஞ்சப்பை இயந்திரத்தால் பக்தர்கள் அவதி

பழுதடைந்த மஞ்சப்பை இயந்திரத்தால் பக்தர்கள் அவதி
மஞ்சள் பை இயந்திரம்
மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பிரசாத கடை அருகில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் கடந்த மாதம் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டு செலுத்தினால், பக்தர்களுக்கு மஞ்சப்பை வழங்கும். இயந்திரம் அமைத்த ஒரு மாதத்திலேயே பழுதடைந்துவிட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இயந்திரம் பழுதடைந்துள்ளது என்ற விபரம் அறியாமல், இயந்திரத்தில் 10 ரூபாய் நாணயம் அல்லது நோட்டுகளை செலுத்துகின்றனர்.

ஆனால், மஞ்சப்பை வராததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால், மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story