தீவிர வாக்கு சேகரிப்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் மதுராந்தகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கினார், முன்னுத்திகுப்பம், ஓணம்பாக்கம், ஜமீன்எண்டத்தூர், முருகம்பாக்கம், தொன்னாடு, இரும்பேடு, வீராணகுனம்,வேட்டூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி.செல்வம் திமுக அரசின் பல்வேறு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருக்கு பொதுமக்கள் ஆரவாரத்துடன் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பொன் சிவகுமார், மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story