காஞ்சிபுரம் பெண் மேயர், கமிஷனருக்கு எதிராக கவுன்சிலர்கள் மீண்டும் போர்க்கொடி!!

காஞ்சிபுரம் பெண் மேயர், கமிஷனருக்கு எதிராக கவுன்சிலர்கள் மீண்டும் போர்க்கொடி!!

kancheepuram-woman-mayor

காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயராக தி.மு.க.வை சேர்ந்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மாநக ராட்சியில் தி.மு.க., அ.தி. மு.க., பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா, சுயேட்சை என 51 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் அ.தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தி.மு.க. கவுன்சிலர்களே மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். மாநராட்சி கூட்டங்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி போர்க் கொடி தூக்கி உள்ள தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்கள் 33 பேர் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்தனர். ஏற்கனவே பணிக்குழு கலைக்கப்பட்ட நிலையில் பொது சுகாதார குழு, கணக்கு குழு, நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு உறுப்பினர்கள் பதவியை தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட 18 எதிர்ப்பு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து உள்ளனர். மீண்டும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 33 எதிர்ப்பு கவுன்சிலர்களின் பிரமாணம் பத்திரங்களையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் 13 கவுன்சிலர்களை உள்ளடக்கி செயல்பட்டு வரக்கூடிய 2-வது மண்டல குழுவின் தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறி 7 எதிர்ப்பு கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 பேர் மீண்டும் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், என்ற எங்கள் கோரிக்கையை தவிர்க்கும் வகையில் மேயருக்கு ஆதரவாக செயல்படும் கமிஷனரை மாற்றி, மன்ற கூட்டத்தை வேறொரு ஆணையரை வைத்து நடத்திட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story