கண்டதேவி தேரோட்டம் துவக்கம்

கண்டதேவி தேரோட்டம் துவக்கம்

சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் 

தேவகோட்டை அருகே கண்டதேவி சிறிகிழிநாதர் என்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் துவங்கியது.
தேவகோட்டை அருகே கண்டதேவி சிறிகிழிநாதர் என்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டது. இந்த தேரின் வெள்ளோட்டம் இன்று நடைபெற உள்ளது. தேர் வெள்ளோட்ட விழா நேற்று மாலை துவங்கியது. தேரில் வலம் வர உள்ள கும்பங்கள் கோயிலில் உள்ள கொடிமரம் முன் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்களுடன் துவங்கியது. தொடர்ந்து தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது. கோயிலில் உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் உட்பட அனைத்து சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. டி.ஐ.ஜி. துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Tags

Next Story