பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா

பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா

பாலசுப்பிரமணியர் 

திருக்கோவிலுார் பாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 4ம் நாளான நேற்று சுவாமி சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் கோவிலில் கடந்த 13ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. 4ம் நாளான நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.

Tags

Next Story