கந்த சஷ்டி விழா, ஜொலிக்கும் கந்தசாமி கோவில்

கந்த சஷ்டி விழா, ஜொலிக்கும் கந்தசாமி கோவில்
கந்த சஷ்டி விழா, ஜொலிக்கும் கந்தசாமி கோவில்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவத்தின் போது, வள்ளி திருக்கல்யாண உற்சவமும், கந்த சஷ்டி விழா நிறைவில் தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கின்றன. இந்தாண்டுக்கான மஹா கந்த சஷ்டி வைபவம், கடந்த 13ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 19ம் தேதி திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைகிறது.

இதற்கிடையில், தினசரி கந்தசுவாமி வள்ளி, தெய்வானையருடன் வீதியுலா வருகிறார். பிரதான சூரம்சம்ஹார விழா, வரும் 18ல் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவில் ராஜ கோபுரம், வட்ட மண்டபம், சுற்றுச்சுவர், சரவணப்பொய்கை குளம், நீராழி மண்டபம், 16 கால் மண்டபம் என, வளாகம் முழுதும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, இரவில் பிரம்மாண்டமாக ஜொலிக்கிறது. பிரதான ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி கோவில் அமைந்திருப்பதால், சாலையில் செல்லும் ஏராளமான வாகன ஓட்டிகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Tags

Next Story