காங்கேயம் : பொதுப்பணித் துறை அதிகாரி மீது காவல் நிலையத்தில் புகார்

காங்கேயம் : பொதுப்பணித் துறை அதிகாரி மீது காவல் நிலையத்தில் புகார்

புகார் அளித்த விவசாயிகள் 

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மிரட்டிய பொதுப்பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்ககோரி பிஏபி பாசன விவசாயிகள் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வெள்ளகோவில் வரை உள்ள கடைமடை பகுதிக்கு பிஏபி கால்வாய் மூலம் தண்ணீர் வரவில்லை என்று கூறி விவசாயிகள் இரவு காங்கேயம் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகை இட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரவில் பொதுப்பணித்துறை அதிகாரி மீது காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தண்ணீர் திருட்டை தடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர் மேலும் குறைவான தண்ணீரை வருகின்றது என்று வரும் தண்ணீரின் அளவு எவ்வளவு என எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தொலைபேசி வாயிலாக பொதுப்பணித்துறை அதிகாரி வடிவேல் மிரட்டல் விடுத்தார் என கூறி இரவில் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Tags

Next Story