காங்கேயம்: எலுமிச்சை கிலோ ரூ.220 க்கு விற்பனை

காங்கேயம்: எலுமிச்சை கிலோ ரூ.220 க்கு விற்பனை

எழுமிச்சை

காங்கேயம் வாரச்சந்தையில் எலுமிச்சை பழம் கிலோ ரூ.220 க்கு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விவரம் வருமாறு : தக்காளி - ரூ. 30 க்கும், சின்னவெங்காயம் - ரூ. 70 க்கும், பெரிய வெங்காயம் - ரூ. 50 க்கும், கத்திரிக்காய் - ரூ. 80, க்கும், கேரட் - ரூ. 80 க்கும், பீன்ஸ் - ரூ.140 க்கும், உருளைக் கிழங்கு - ரூ. 50 க்கும், பீட்ரூட் - ரூ. 80 க்கும் , முருங்கை கிலோ ரூ. 40 க்கும், பச்சைமிளகாய் - ரூ‌. 60 க்கும், காலிபிளவர் - ரூ‌. 40 க்கும், அவரை - ரூ. 80 க்கும், முள்ளங்கி - ரூ‌. 40க்கும், புடலங்காய் -ரூ. 60 க்கும், வெண்டைக்காய் -ரூ‌. 60 க்கும், பீர்க்கங்காய் - ரூ. 100 க்கும், கொத்தவரை - ரூ. 60க்கும், கோவைக்காய் மற்றும் முட்டைகோஸ் - ரூ. 50க்கும், பூண்டு - ரூ. 200க்கும், வரமிளகாய் - ரூ. 200க்கும் விற்பனை செய்யப்பட்டது‌ என்று சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story