சுகாதார வளாகத்தை திறந்து வைத்த கனிமொழி

சுகாதார வளாகத்தை திறந்து வைத்த கனிமொழி

 தூத்துக்குடி உப்பள பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை எம்.பி., கனிமொழி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி உப்பள பகுதியில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகத்தை எம்.பி., கனிமொழி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர், பெரியசாமி நகர், ராஜபாண்டி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இந்த உப்பளங்கள் பணியாற்றக்கூடிய பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு உரிய இட வசதி இன்றி அவதிப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து பெரியசாமி நகர் பகுதியில் சுமார் 11 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.

இதன் துவக்க நிகழ்ச்சிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சுகாதார வளாகத்தை தொடங்கி வைத்தனர். மேலும் திருச்செந்தூர் சாலையில் உள்ள உப்பாத்து ஓடை முதல் முள்ளக்காடு வரை உள்ள சாலைகளில் புதிதாக ஐஓசிஎல் நிறுவனம் சார்பில் 56 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

Tags

Next Story