குமரியில் கனிமொழி எம்பி இன்று பிரச்சாரம் 

குமரியில் கனிமொழி எம்பி இன்று பிரச்சாரம் 

கனிமொழி எம்.பி

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோரை ஆதரித்து கனிமொழி எம்.பி இன்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.

கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், அதிமுக, மற்றும் நாம் தமிழர் கட்சிகள் என தனித்தனியாக களம் காண்கிறார்கள். குறிப்பாக விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் அனைத்தும் பெண் வேட்பாளர்களை களம் இறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க இன்று திங்கள்கிழமை குமரி மாவட்டத்தில் கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்கிறார். நெல்லை மாவட்டம் வழியாக இன்று மாலை கன்னியாகுமரிக்கு வருகிறார்.

பின்னர் மாலை 4:30 மணிக்கு குழித்துறை அண்ணா சிலை முன்பு திறந்த ஜீப்பில் நின்றபடி பிரச்சாரம் செய்யும் அவர் தொடர்ந்து 5-30 மணிக்கு புதுக்கடை பஸ் நிலையம், 6:15 மணிக்கு குளச்சல் பீச் முக்கு, இரவு 7 மணிக்கு நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு மற்றும் 7:45 மணிக்கு கொட்டாரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கனிமொழி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Tags

Next Story