பளுதூக்கும் அசோசியேஷன் செயலாளருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து !

பளுதூக்கும் அசோசியேஷன் செயலாளருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து !

 கனிமொழி எம்பி

தூத்துக்குடியில், கனிமொழி எம்பியை சந்தித்து தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் அசோசியேஷன் மாநில செயலாளர் எஸ்எம்பி அசோக் வாழ்த்து பெற்றார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு அமெச்சூர் வெயிட் லிப்டிங் அசோசியேசன் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 2024 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரை பதவிக்காலத்திற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அமெச்சூர் மாநில செயலாளராக வழக்கறிஞர் எஸ்எஸ்பி அசோக் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் அசோசியேஷன் மாநில செயலாளராக தேர்வாகியுள்ள வழக்கறிஞர் எஸ்எம்பி அசோக், திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story