தாமிரபரணி ஆற்றில் குஞ்சு மீன்களை விட்ட கனிமொழி எம்.பி

தாமிரபரணி ஆற்றில் குஞ்சு மீன்களை  விட்ட கனிமொழி எம்.பி

மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணைக்கட்டில் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற தாமிரபரணி ஆற்றில் நாட்டு கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் நிகழ்ச்சியில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, ஆகியோர் முன்னிலையில் ஆற்றில் நாட்டின கெண்டை மீன்குஞ்சுகளை விட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, இணை இயக்குநர் (மீன்வளம்-மீனவர் நலத்துறை) அமல் சேவியர், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கோமதி ராஜேந்திரன், திருவைகுண்டம் பேரூராட்சி மன்றத் தலைவர் பா.சினேக வள்ளி, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்றத் தலைவர் சாரதா பொன்இசக்கி, உதவி இயக்குநர் (மீன்வளம்-மீனவர் நலத்துறை) விஜயராகவன், திருவைகுண்டம் சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story