கனிமொழி எம்பி பிறந்ததினம்: தூய்மைபணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்

கனிமொழி எம்பி  பிறந்ததினம்: தூய்மைபணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
X

புத்தாடை வழங்கல் 

திருப்பூரில் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுகளை சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்.

திமுக மகளிர் அணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக,38,39,40 -ஆவது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுகளை, வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்MLA வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு‌‌‌நாகராசன் , மாநில பிரச்சார குழு நிர்வாகி உமாமகேஸ்வரி , மாவட்ட துணை செயலாளர் நந்தினி ,

பகுதி கழகச் செயலாளர் முருகசாமி , மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி , மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி , வட்ட கழக செயலாளர்கள் தன்டபானி, முத்துகுமாரசாமி, விவேகானந்தன், சீனிவாசன் அவர்களும், மாமன்ற உறுப்பினர்கள் சுபத்ரா தேவி ஆனந்தன், சாந்தி அய்யாசாமி மற்றும் கழக நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story