கனிமொழி எம்பி பிறந்ததினம்: தூய்மைபணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்

புத்தாடை வழங்கல்
திமுக மகளிர் அணி செயலாளர், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக,38,39,40 -ஆவது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் உணவுகளை, வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ்MLA வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி முநாகராசன் , மாநில பிரச்சார குழு நிர்வாகி உமாமகேஸ்வரி , மாவட்ட துணை செயலாளர் நந்தினி ,
பகுதி கழகச் செயலாளர் முருகசாமி , மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி , மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி , வட்ட கழக செயலாளர்கள் தன்டபானி, முத்துகுமாரசாமி, விவேகானந்தன், சீனிவாசன் அவர்களும், மாமன்ற உறுப்பினர்கள் சுபத்ரா தேவி ஆனந்தன், சாந்தி அய்யாசாமி மற்றும் கழக நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.