மானாமதுரையில் கன்னிபூஜை, அன்னதான விழா

மானாமதுரையில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கன்னிபூஜை மற்றும் அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கம் சார்பில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கன்னிபூஜை நடைபெற்றது. இதில் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள், ஓம் சக்தி பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று, பூஜைகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற அன்னதானத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்

Tags

Next Story