புத்தகத் திருவிழா பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி

புத்தகத் திருவிழா பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி
புத்தக திருவிழா கலை நிகழ்ச்சிகள் 
புத்தக வாசிப்பை அதிகரிக்க நடத்தப்பட்ட புத்தக திருவிழா

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் இரண்டாவது நாளில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வண்ண மயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்வில் முனைவர் இரா.சுரேஷ் சுவாமியார் காணி மிருக நேயம் என்ற தலைப்பிலும், லெட்சுமி மணிவண்ணன் நவீன கவிதைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் விருந்தினர்களை கௌரவித்தார். மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story