கேலோ இந்தியா போட்டிகளில்  வென்ற குமரி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு

கேலோ இந்தியா போட்டிகளில்  வென்ற குமரி வீரர்களுக்கு கலெக்டர் பாராட்டு
விளையாட்டில் சாதனை படைத்தவர்களை குமரி கலெக்டர் பாராட்டினார்
சென்னையில் நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரியை சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

சென்னையில் 2023 ஆண்டுக்கான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதி சேர்ந்த ரெட்டை சகோதரிகளான எம். ஆன்சிலின் 800மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், எம். அக்ஸிலின் வெள்ளி பதக்கம் பெற்றனர். மேலும் ஆயிரம் மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.யோகாசன போட்டியில் எஸ். ஹெச். நவ்யா தங்கப்பதக்கம், வாள் சண்டை தனி நபர் பிரிவில் ஆர்லின், ஆன்பிளக்ஸ் காட்வின் தங்கப்பதக்கத்தையும், ஜெபார்லின் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

ஆண்களுக்கான குழு போட்டியில் ஆன்பிளஸ் காட்வின், அக்ஷத், ஆர்லின், ஷெர்ஜின் ஆகியோர் வெங்கல பதக்கம் வென்றுள்ளனர். பெண்களுக்கான குழு போட்டியில் ஜபார்லின் மற்றும் ஸ்டெப்ரி வெங்கல பதக்கம் வென்றுள்ளனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர் வீராங்கனைகளை கலெக்டர் ஸ்ரீதர் கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அலுவலர் ராஜேஷ், பயிற்சியாளர்கள், பணியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story