ஜப்பானில் குமரி பொறியாளர் உயிரிழப்பு

ஜப்பானில் குமரி பொறியாளர் உயிரிழப்பு

பலியானவர்

ஜப்பானில் 14வது மாடியில் இருந்து தவறி விழுந்து குளச்சலை சேர்ந்த பொறியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் பீட்டர். இவ ரது மகன் பிண்டோ ஷரோன்.மென்பொருள் பொறியாளரான இவர் டிசிஎஸ் நிறுவனத் தில் பணியாற்றி வந்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் டோக்கியோ கிடாசுனாவில் உள்ள நிறுவன கிளையில் பணிய மர்த்தப்பட்டார். அவர் சக ஊழியருடன் அங் குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். பிப்ரவரி 22 ம் தேதி காலை அவர் அந்த கட்டிடத்தின் 14-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

இது சம்பந்தமாக டிசிஎஸ் நிறுவனம் இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தது. இறந்தவர் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டுவர பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் சிறுபான்மையினர் நலம் மற்றும் அயலக தமிழர்நல அமைச்சர் செஞ்சிமஸ்தானிடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஜப்பானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story