கல் குவாரிகளை மூட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு 

கல் குவாரிகளை மூட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  மனு 
கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெனிபர்
அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இயங்கும் கனிமவள டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெனிபர் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகம் நடந்தது. இந்த முகாமில் நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜெனிபர் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பல விபத்துகள் நடக்கிறது. எனவே அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் இயங்கும் டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story