ரயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

ரயிலில் இருந்து தவறி விழுந்த புதுப்பெண் உயிரிழப்பு - போலீசார் விசாரணை
விபத்தில் உயிரிழந்த ஷீலா
ஆறு மாதங்களுக்கு முன்பு திருமண பெண் உயிரிழந்ததால் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, அழகியநகர் பகுதியை சேர்ந்தவர் வீரசிங்கம் மகள் ஷீலா (21). கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஷீலாவுக்கு திருமணம் நடந்தது. பின்னர் தனது கணவருடன் சென்னையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு கடந்த 13 ஆம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியாக வந்தார். ஆரல்வாய்மொழி ரயில் நிலையத்தில் இறங்க முயன்ற போது, ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், ஷீலா சிகிச்சை பலனின்றி பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story