ரயில் மோதி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு

ரயில் மோதி அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த விஜயகுமார்
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நேர்ந்த விபரீதம்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பன விளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (49). இவர் படர்ந்தாலுமூடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளன.

நேற்று விடுமுறை என்பதால் குழித்துறை அடுத்த கழுவன்திட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராத விதமாக விஜயகுமார் மீது மோதியது.

இதில் உடல் சிதைந்து விஜயகுமார் பரிதாபமாக மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story