செங்கல் சூளையில் திடீர் தீ - 30 லட்சம் சேதம்

செங்கல் சூளையில் திடீர் தீ - 30 லட்சம் சேதம்

செங்கல் சூளை

பூதப்பாண்டி அருகே செங்கல் சூளையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
குமரி மாவட்டம் சிதறால் பகுதியை சேர்ந்தவர் ஜாண் வினு (31). இவர் பூதப்பாண்டியை அடுத்துள்ள ஞாலம், கரடித்தோப்பு பகுதில் செங்கல் சூளை நடத்தி வந்ததாகவும் கடந்த ஜூலை மாதம் முதல் மாவட்ட நிர்வாகத்திடம் செங்கல் சூளை நடத்த அனுமதி மறுக்கபட்டதால் செங்கல் சூளை நடத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலையில் திடிரென செங்கல் சூளை பகுதியில் தீ பிடித்து எரிவதாக ஜாண் வினுவிற்கு அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்து விட்டு நாகர்கோவில் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் தீ பரவாமல் அணைத்துள்ளார்கள். இது தொடர்பாக ஜாண் வினு பூதப்பாண்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் முப்பது இலட்சம் பொறுமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags

Next Story