கன்னியாகுமரி : கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை.

கன்னியாகுமரி : கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை.
பைல் படம்
கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடை விதித்துள்ளனர்.
கன்னியாகுமாரி போலீஸ் துணை சூப்பிரண்ட் என்று மகேஷ் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளை கண்காணிக்க மூன்று தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளில் நடைமுறையில் உள்ள அனுமதிகளின் படி புத்தாண்டு கொண்டாடலாம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ், அதிக சத்தம் ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாலைகளில் நள்ளிரவு நேரங்களில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் யாரும் ஈடுபடக்கூடாது. என்று அவர் கூறினார்.

Tags

Next Story