கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்

மார்த்தாண்டத்தில் நடந்த குமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்றார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால் காங்கிரசார் தேர்தல் வேலையை தொடங்கிவிட்டனர்.இதே போல் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் அதற்கான பணிகளிலும் காங்கிரஸ் கட்சியினர். ஈடுபட்டு உள்ளனர்.இந்த நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை நேற்று நாகர்கோவிலுக்கு வருகை தந்தார்.

பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இன்று மார்த்தாண்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிக்காக எவ்வாறு செயல்படுவது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது போன்றவை குறித்து ஆலோசனை வழங்கினார் இடைத்தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் ஆட்ட வேண்டிய பணிகள் போன்றவை குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்தில் எம்பி விஜய் வசந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் பிரின்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்

Tags

Next Story