கணியம்பாடி: வீட்டின் அருகே பிணமாக கிடந்த முதியவர்!

கணியம்பாடி: வீட்டின் அருகே பிணமாக கிடந்த முதியவர்!

காவல்துறை விசாரணை


கணியம்பாடி அருகே பிணமாக கிடந்த முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் மணி (78). இவர் தனது வீட்டின் அருகே இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று,மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story