கெங்கவல்லி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி

கெங்கவல்லி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
1
கெங்கவல்லி அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வாழக்கோம்பை பள்ளியில் தொடங்கிய கராத்தே பயிற்சியில் பங்கேற்ற மாணவிகள்கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டுக்கு 6, 7, 8 வகுப்பு மாணவிகளுக்கான கராத்தே பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து மூன்று மாதம் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியை கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் ர.ஸ்ரீனிவர்ஸ் தலைமையில் மேற்பார்வையாளர் (பொ) ராணி மற்றும் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆய்வு செய்தனர்.

இதேபோல அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10ஆ ம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட உள்ளது.

Tags

Next Story